Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 09.08.09 முதல் 15.08.09 முடிய
 
.
Saturday, 08 August, 2009 03:39 PM
.

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)
எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மேஷராசியினரே உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள்.  இந்த வாரம் மனக்கவலை குறையும். சந்திரன் சஞ்சாரத்தால் வார மத்தியில் பணவரவு இருக்கும்.  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். ராசிக்கு இரண்டில் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் செய்தாலும் குரு பார்வை இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

.
தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு: அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு:  கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
எந்தநேரத்தில் எதை பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ரிஷப ராசியினரே  நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். ராசியாதிபதி சுக்கிரன் வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்க செய்வார்.  மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் குரு பார்வை பெறுவதால் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

 தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு:  மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். 

மாணவர்களுக்கு:  கல்வியில் திருப்தி யான நிலை காணப்படும். வாகனங் களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. 

சந்திராஷ்டமம்: இல்லை  

பரிகாரம்:  பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்
திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்க தயங்காத மிதுன ராசியினரே நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும்.  மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் மூலம் எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வார இறுதியில் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.
ராசிக்கு இரண்டில் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து  வாடிக்கையாளர் களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக் கிடையே  வாக்குவாதங்கள்  உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு: வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய கடக ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். ராசியாதிபதி சந்திரன்  சஞ்சாரத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். ராசியில் சூரியன், கேது சஞ்சாரம் இருப்பதால் உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம்    ராசிக்கு இரண்டில் புதன், சனி சஞ்சாரம் இருப்பதால் பண பற்றாக்குறை ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம்  கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள்  அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக் கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.  

பெண்களுக்கு:  பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப் படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும். 

மாணவர்களுக்கு:  கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில்  திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

வாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும்  தாண்டி வெற்றி நடைபோடும் சிம்ம ராசியினரே இந்த வாரம்  காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. சந்திரன் சஞ்சாரம் பயணங்களை ஏற்படுத்தலாம். வார இறுதியில் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். ராசியில் சஞ்சாரம் செய்யும் புதன், சனியால் மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக  பாதுகாத்துக் கொள்வது நல்லது. ராசிக்கு 12ல்  ராசியாதிபதி சூரியன் கேதுவுடன் சஞ்சாரம் செய்வது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். 

பெண்களுக்கு:  எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவு களை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 9.8.2009 பகல் 1.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 11.8.2009 இரவு 9.25 மணி வரை இருப்பதால் காரியங்களில்தடை, தாமதம் உண்டாகலாம். வீண்அலைச்சல் ஏற்படும்.

பரிகாரம்:  விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் கன்னி ராசியினரே இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்திலும், இறுதியிலும் நற்பலன் களை தரும். வார மத்தியில் வீண் அலைச்சல் உண்டாகும். ராசியாதிபதி புதன் சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்வதால் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. 

ராசிக்கு 11ல் சூரியன், கேது சஞ்சாரம்  இருப்பதாலும் 10ல் சுக்கிரன் இருப்பதும்  தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைபளு குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  

பெண்களுக்கு:  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். 

மாணவர்களுக்கு:  பாடங்களை ஒருமுறைக்கு  பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு  உதவும். 

சந்திராஷ்டமம்: 11.8.2009 இரவு 9.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 13.8.2009 இரவு 2.30 மணிவரை இருப்பதால்  வீண்

அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்:  ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே  (தாம்பரம் அருகேயும்) உள்ள மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால பெருமாளை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)
கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த
துலாராசியினரே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரத்தால் பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வது விரும்பி  பொருள்களை வாங்க  எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

பெண்களுக்கு: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். 

மாணவர்களுக்கு:  பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:  13.8.2009 இரவு 2.30 மணி முதல் 16.8.2009  அதிகாலை6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்  புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,
அனுஷம், கேட்டை)

எதை செய்தாலும் அதில் லாபம்  இருக்க வேண்டும் என்ற  கொள்கை உடைய விருச்சிக ராசியினரே நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் புதிய நபர்களின்  நட்பை ஏற்படுத்தும்.  ராசியாதிபதி  செவ்வாய் ராசிக்கு 7ல் குரு பார்வையில் சஞ்சாரம் செய்வதால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க  வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை  செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.

பெண்களுக்கு:  எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில்  ஈடுபடுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு:  கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  இல்லை.

பரிகாரம்:  கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த  எண்ணங்களும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும்.   வார தொடக்கத்திலும் மத்தியிலும் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  ராசியாதிபதி குரு ராசிக்கு இரண்டில் ராகு சேர்க்கை பெற்று இருப்பதால் பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  எதிலும்  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து  செயல்படுவது வெற்றிக்கு உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக  செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே  சகஜநிலை காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு: எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. 

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்:  இல்லை

பரிகாரம்: வடலூர்  ராமலிங்க சுவாமிகளை  வணங்கி ஜோதி தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
சொல்லாற்றல் செயலாற்றல் இரண்டும் ஒருங்கே  பெற்ற மகர ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர்.  இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.   உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள்.  ராசியாதிபதி சனி ராசிக்கு 8ல்  புதனுடன்  சேர்ந்து இருப்பதால் எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.   ராசியில்  குருவும், ராகுவும் இருப்பதால் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
 
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பெண்களுக்கு: காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப் படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். 

மாணவர்களுக்கு:  முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் கும்பராசியினரே நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம்  காரியதாமதம் ஏற்படக்கூடும். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்திலும், வார இறுதியிலும் வீண் பிரச்சனைகளை தரும்.  அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.   ஏற்கனவே  பாதியில் நின்ற பணிகள் நடக்கும். ராசியாதிபதி  சனி ராசிக்கு 7ல் புதனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால்   விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும்.   உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். 
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள்.  கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.  பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு: பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.  

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை   படிக்க வேண்டி வரும்.  

சந்திராஷ்டமம்:  இல்லை.

பரிகாரம்:  வியாழக்கிழமையில்  ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க மீனராசியினரே, நீங்கள்  கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த வாரம் பல யோகங்கள் உண்டாகும்.   நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில்  வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். ராசியாதிபதி குரு ராசிக்கு 11ல் ராகுவுடன் சேர்க்கை பெற்றிருப்பதால்  எந்தஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு   கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

கணவன், மனைவிக் கிடையே இதமான உறவு காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். 

பெண்களுக்கு: எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு:  கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
| |

மற்றவை :