Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இளையராஜாவின் இசை அலை
 
.
Sunday, 18 January, 2009 04:15 PM
.

தமிழ் சினிமாவையும், இசையையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு  ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள்  இசை ராஜ்யம் நடத்தி வந்துள்ளனர்.  அந்தவகையில் மேற்கத்திய இசை மோகத்தில் இருந்து தமிழர்களை விடுபடவைத்த பெருமை இசைஞானி என்று  ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவையே சேரும்.

.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவமான இசைக்கோர்வைகளை உருவாக்கிய இளையராஜா சமீப காலமாக வெற்றிகளை ருசிக்க தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு  அவரது ரசிகர்களாலேயே முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த 2009 ஆம் ஆண்டு இளையராஜாவின் இசை ஆண்டாக துவங்கியுள்ளது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்க துவங்கியுள்ளனர்.

பாலாவின் இயக்கத்தில்  நான் கடவுள், மிஷ்கினின் இயக்கத்தில் நந்தலாலா என்ற 2 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இவ்விரண்டு படங்களின் இசையும் சமீபத்தில் வெளியானது.  முற்றிலும் புதுமையான இசை அனுபவத்தை தருபவையாக இந்த படங்கள் அமைந்துள்ளதாகவும்,  மீண்டும் இளையராஜா அலை வீச துவங்கி இருப்பதாகவும்  கோலிவுட்டில் பேசப்படுகிறது.
| |

மற்றவை :