சென்னை, நவ. 4:சித்த மருந்துகளின் செயல்திறனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அறிவியல்சார் ஆய்வுகள், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் எஸ்.காந்தி செல்வன் கூறினார். அவர் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இது பற்றிய இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் ஒன்றை துவக்கி வைத்தார். |