Advertisements




 
 
 
 
 
 

அசாம் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

.

Sunday, 22 November, 2009   12:12 PM
.
கவுகாத்தி, நவ.22:அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத் தில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
.
அசாம் தலைநகர் கவுகாத்தியி லிருந்து மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்பாரி என்னுமிடத்தில் இன்று காலை 10.15 மணியளவில் இரண்டு வெடி குண்டுகள் வெடித்தன.

போலீஸ் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிளில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இது வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத் திற்கு உல்பா தீவிரவாதிகள் காரண மாக இருக்கக் கூடுமென போலீசார் சந்தேகிக்கின்றர்.போலீஸ் நிலையத்திற்கு முன்பாகவே இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்திருப்பது அசாமில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
| |

மற்றவை :