Advertisements




 
 
 
 
 
 

பஸ் கண்ணாடி: 2 பேருக்கு வலை

.

Saturday, 17 January, 2009   11:24 AM
.
சென்னை,ஜன.17: பேருந்தை நிறுத்துவதற்குள் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
.
பாரிமுனையிலிருந்து நேற்று தடம் எண் 42 பேருந்து சென்று கொண்டி ருந்தது. அப்போது பேசின் பாலம் நடராஜர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் ஒரு கும்பல் பஸ்சை நிறுத்துமாறு கைக்காட்டியது. டிரைவர் பஸ்சை நிறுத்துவதற்குள் கும்பலில் இருந்த 2 பேர் கற்களை எடுத்து பஸ் காண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து டிரைவர் ராஜசேகரன் கொடுத்த புகார் தொடர்பாக பேசின் பாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
| |

மற்றவை :