மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் http://www.maalaisudar.com/?p=35375 Export date: Thu Feb 21 0:37:52 2019 / +0000 GMT |
கோயம்பேட்டில் கஞ்சாவுடன் 5 மாணவர்கள் சிக்கினர்![]() கோயம்பேடு போலீசார் மார்க்கெட் பகுதியில் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடையேயான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் பல்கலைகழகம் மற்றும் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கஞ்சா வாங்கியதாக தெரியவந்தது. இந்த கஞ்சாவை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தார்களா? இல்லை வேறு யாருக்கும் விற்பனை செய்தவற்கு வாங்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
Post date: 2018-09-09 09:43:22 Post date GMT: 2018-09-09 09:43:22 Post modified date: 2018-09-09 09:43:22 Post modified date GMT: 2018-09-09 09:43:22 |
Export date: Thu Feb 21 0:37:52 2019 / +0000 GMT This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com |