மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் http://www.maalaisudar.com/?p=35171 Export date: Sat Feb 16 3:07:51 2019 / +0000 GMT |
வெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்![]() கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு அணியில் டாப் 2 இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு இடையே பனிப்போர் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கும், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பனிப்போர் நடந்துவந்திருக்கலாம் என்பதை ரோஹித்தின் தற்போதைய செயல் உறுதிசெய்துள்ளது. ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இதுவரை கோலியை பின் தொடர்ந்துவந்த ரோஹித் சர்மா, திடீரென அன்ஃபாலோ செய்ததோடு, நட்பு வட்டாரத்திலிருந்து கோலியை நீக்கியுள்ளார். மேலும் கோலியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளதையும் ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். இதனால், ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்டிருந்த விரிசல் வெடித்துள்ளது. ரோஹித் சர்மாவின் இந்த செயல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மாவின் செயல் முதிர்ச்சியற்றது என ஹர்ஷா போக்ளே விமர்சித்துள்ளார். ரோஹித் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல ட்வீட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமளிக்கப்படாததால், அதிருப்தியடைந்த ரோஹித், இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. |
Post date: 2018-09-06 09:48:30 Post date GMT: 2018-09-06 09:48:30 Post modified date: 2018-09-06 09:48:30 Post modified date GMT: 2018-09-06 09:48:30 |
Export date: Sat Feb 16 3:07:51 2019 / +0000 GMT This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com |